இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனை வளம் - 置豫
தனக்கும் பொறுப்போடு இருந்து, பிறருக்கும் பொறுப்போடு இருப்பது என்பது சிரமமான காரியம்தான். ஆனல் இந்தச் சிரமமான காரியத்தை ஒரு தேசம் எவ்வளவு காலத்துக்குத்தான் தள்ளிப் போட முடியும்? எல்லாத்துறை யிலும் அக்கறையும், பொறுப்புமுள்ளவர்கள் பெருகாமல் ஒரு தேசம் பக்குவப்பட முடியாது. பக்குவப்பட்ட தனி நபர்கள் சிலர் எல்லாத் தேசத்திலும், எல்லாக் காலத்திலும் இருப்பார்கள். இந்தியாவிலும் இருந்தார்கள், இருக்கிருர் கள். ஆனல் மக்களும் பக்குவப்பட வேண்டும். மக்கள் பக்குவப்படாவிட்டால் ஜனநாயகம் சீரழியும். ★