பக்கம்:சிந்தனை வளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. திசை திருப்பும் கலையில் ..

நீங்கள் எத்தனையோ கலைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். ஆயகலைகள் 64 என்றுகூட முன்னேர்கள் அதனுடைய எண்ணிக்கையைக் கூறியிருக்கிருர்கள். நீங்கள் இதுவரை கேள்விப்படாத-முன்னேர்களின் எண்ணிக்கையில். அடங்காத-புதிய கலே ஒன்று பதவியில் உள்ள இந்நாட்டு அரசியல்வாதிகளால் அபாரமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் மற்றவர்கள் ஒரளவுதான் தேர்ந்திருக்கிருர்கள் என்ருல் அரசியல் வாதிகள் ரேங்க்' வாங்கக் கூடிய அளவுக்குத் தேர்ந்திருக்கிருர்கள்.

தேசத்தையே ஆட்டிப்படைக்கும் அந்த மகத்தான கலையின் பெயர் என்னவென்று நினைக்கிறீர்கள்? அது தான் 'திசை திருப்பும் கலை இந்த மாபெரும் கலை தெரிந்திருந்தால் வேறு ஒரு திறமையும் இல்லாமலே ஆண்டுக்கணக்கில் இந்நாட்டு மக்களே ஆண்டு கொண்டிருக்கலாம்.

மக்களில் யாரும், தங்களுடைய பிரச்னைகள் எல்லாம். திசை திருப்பப்படுகின்றன என்பது கூடப் புரியாமலே கரகோஷம் செய்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருப் பார்கள். -

இலட்சக்கணக்கான கிராமங்கள் குடி தண்ணிர் இல்வா மல் சிரமப்படுகின்றன என்ற கசப்பான உண்மையை மறந்து விட்டு, அல்லது மறைத்து விட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் கலர் டெலிவிஷன் வரப் போகிறது-என்று. சொன்னல் ஜனங்கள் வாயில் விரலை இட்டு நகத்தைக். கடித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

"சர்க்கரை, அரிசி விலைகள் ஏறி விட்டன. சர்க்கரையும், மண்ணெண்ணையும் கிராமங்களில் அறவே கிடைக்க வில்லை’-என்ற உண்மையைக் கெளரவமாக ஒப்புக் கொள் வதற்குப் பதில், "எல்லாவற்றுக்குமே முந்திய கட்சியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/134&oldid=562376" இலிருந்து மீள்விக்கப்பட்டது