இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனை வளம் 17.3
ராஜாஜி, காமராஜ், பெரியார் மூவரிடமும் எனக்குப் பிடித்த அம்சம் அர்த்தங்களே மறைந்து காணுமல் போகு மளவு வார்த்தைப் புதர்களே அவர்கள் ஒருபோதும் உருவாக்கியதில்லை. *
இங்கு பல தமிழ்ப் பேச்சாளர்களையும், உபசார வார்த்தை + அடைமொழி உபயோகிப்பாளர்களையும் பார்க்கும்போது, கை நிறைய தீப்பெட்டிப் படம் சேர்த்து வைத்துக் கொண்டு-தீப்பெட்டிப் படமே சேர்க்காத மற்ருெரு பையனை மிரட்டுபவனை அகம்பாவம் பிடித்த பையன்தான் என் நினைவுக்கு வருகிருன். வார்த்தைப் புதர் களும், அடைமொழிப் பந்தல்களும் பிரசங்கங்கள் அல்ல என்று இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? ★