பக்கம்:சிந்தனை வளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏92 சிந்தனை வளம்

களுக்குப் பொது மக்கள் அளித்த புதிய ஆசீர்வாதமாகவே கருதப்படும் மனப்பான்மையை இங்கு மிகப் பெரியவர்களே உண்டாக்கி விட்டார்கள். -

பல தவறுகளைச் செய்தவர்கள் பெறும் ஒரு வெற்றியே பொதுஜன ஆசியாகக் கருதப்படுவது போலக் காட்டிக் கொள்ள வசதி இருக்கும் ஒரு நாட்டில், அத்து மீறல் களுக்குக் கூசுகிற மனப்பான்மையை இளம் தலைமுறை யினரிடத்தில் ஏற்படுத்துவதே மிகவும் சிரமமான காரிய மாகத்தான் இருக்கும். -

கண் முன்னுல் அத்துமீறல்களைச் செய்தே வாழ்வில் வசதியாக இருப்பவர்களையும், அத்துமீறல்களுக்கு அனு: மதிக்கப்பட்டு முன்னேறியவர்களையும், அத்துமீறல்களுக்காக ஆசீர்வதிக்கப்பட்டவர்களையும் பார்த்துக் கொண்டே அத்து. மீருமல் அடக்கத்துடனும், ஒழுங்குடனும் கட்டுத்திட்ட மாக வாழ்ந்து கொண்டிருக்க யாராலும் முடியாது.

இந்நாட்டின் புதிய தலைமுறையினராலும் அது முடிய வில்லை. இளைஞர்களிடையே உள்ள குழப்பங்களை இந்தக். கண்ணுேட்டத்தில் பார்த்தால் அதற்கு முதியவர்கள் எப்படிக் காரணமாகிருர்க்ள் என்பது புரியும். இப்படிப் பட்ட தலைமுறையில், இப்படிப்பட்டவர்களுக்கிடையே நக்ஸலைட்டுகள் தோன்ருமல், முனிபுங்கவர்களா தோன்று: வார்கள்? அத்துமீறலைக் கலையாகப் பயின்றவர்கள் பிறரை எப்படி அத்துமீறலிலிருந்து காக்க முடியும்? ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/194&oldid=562436" இலிருந்து மீள்விக்கப்பட்டது