பக்கம்:சிந்தனை வளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் - 2 I

பதவியில் நியமித்த அரசாங்கத்துக்கு விசுவாசம் காட்டு வதில், நாலில் ஒரு பங்கு கூடப் பதவிக்கும், மக்களுக்கும். விசுவாசம் காட்டுவதில்லை.

இழுபடும் ஜவ்வு மிட்டாய் மாதிரி வருஷங்கள் நீண்டு கொண்டே போகக்கூடிய சில மூவாயிர ரூபாய்-நாலாயிர ரூபாய்ப்பதவிகளைத்தேடி ஒய்வு பெற்ற பெரிய உத்தியோகஸ் தர்கள் பிடித்துக்கொள்கிருர்கள். அந்தப் பதவி வேலைகளை அவர்களது ஆயுட் காலம்வரை இழுத்தடிக்கும் தந்திரமும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஆனால், அதே சமயத்தில் சுறுசுறுப்பும் ஆர்வமும், அறிவும், சமயோசித புத்தியுமுள்ள படித்த இளைஞர்கள் நடுத் தெருக்களில் வேலே தேடி அலைந்து துருப்பிடித்துப் போய்க்கொண்டிருக்கிருர்கள். இளைஞர்களைக் கரையேற் றுவதுதான் முதல் வேலை என்று பதவிக்குப் போகிற ஒவ்வோர் அரசியல் கட்சியும் நாற்காலிக்குப் போனவுடன் அதை மறந்துவிடுகிறது. இந்தக் கண்ணுேட்டத்தில் பார்த் தால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை அளித் தால்தான் இப்பிரச்னையைத் தீர்க்க முடியும் போவிருக்கிறது. "இளைஞர்களுக்குத்தான் இந்நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பெரும் பொறுப்பு இருக்கிறது’ என்று மேடையில் முழங்காத தலைவர் இல்லை. ஆனல் இந்நாட்டு இளைஞர் களில் பெரும்பாலோர் தங்கள் சொந்த எதிர்காலத்தையே இன்னும் முடிவு செய்ய இயலாதவர்களாக வைக்கப்பட் டிருக்கிருர்கள் என்பதுதான் பிரத்யட்ச உண்மையாகும்.

உத்தியோக வயது விஷயம் தவிர நம் நாட்டில் பல்வேறு அரசாங்க அமைப்புக்களிலும், அரசாங்கச் சார்புள்ள அமைப்புக்களிலும் உள்ள சம்பள விகிதாசார வித்தியாசம் பெரும் குழப்பத்தை உண்டாக்கக் கூடியது. சில நிறுவனங் களில் அட்டெண்டர், டிரைவர் வாங்குகிற சம்பளம் வேறு சில நிறுவனங்களில் கிளார்க், ஹெட்கிளார்க் சம்பளத்தை விட அதிகமாயிருக்கிறது. பாங்குகள், எல். ஐ. சி. யில் வேலை பார்ப்பது அதிருஷ்டமாகக் கருதப்படுகிறது. ஒரு

சி.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/23&oldid=562265" இலிருந்து மீள்விக்கப்பட்டது