பக்கம்:சிந்தனை வளம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. எதையாவது எப்படியாவது

இரயிலில் டிக்கெட் இல்லாமல் பிரயாணம் செய்கிறவன் டிக்கெட் பரிசோதகர் வருகிற ஒரிரு கணங்களுக்கு, எங்காவது எப்படியாவது மறைந்து நின்று சம்ாளிக்க முயல் கிருன். டிக்கெட் இல்லாமலே பிரயாணத்தை வெற்றிகர மாக முடித்துத் தான் வந்து இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இறங்கி விட்டாலோ டிக்கெட் பரிசோதகர் நிற்கும் கேட்டில், அல்லது வேறு சந்துகளின் வழியாக எதையாவது பண்ணி எப்படியாவது வெளியே வந்துவிட முயல்கிருன் . தவருன, இந்தப் பிரயாணியின் நிதான்மில்லாத அவசரம் தான் இன்று வாழ்வின் சகல துறைகளிலும் தெரிகிறது.

பரீட்சை ஹால்களில் குத்து வெட்டுக்கள் நடைபெறு கின்றன. ஏனென்ருல், மாணவர்கள் எதையாவது பண்ணி எப்படியாவது தேர்ச்சியும், வெற்றியும் பெற முயல் கிரு.ர்கள்.

தேர்தல்களில் குத்து வெட்டு, அடிதடி, சூறையாடல், கொலைகள் போன்றவை வழக்கமாகி விட்டன. ஏனெனில், வேட்பாளர்கள் எதையாவது பண்ணி எப்படியாவது யாருடனவது கூட்டுச் சேர்ந்து வெற்றி பெற முயல்கிருர்கள். கடைவீதிகளில் கலப்படம், அளவுக்குக் குறைவாக நிறுத்தளித்தல், விலை உயர்வு இவை இயல்பாக நிகழ் கின்றன. எதையாவது பண்ணி எப்படியாவது லாபம் சம்பாதிக்க முயல்கிரு.ர்கள். வியாபாரிகள் வியாபார தர்மங்

களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதே இல்லை. -

பத்திரிகைகளின் விற்பனைப் போட்டியும், சர்க்குலேஷன் எண்ணிக்கையை மற்றவர்களைவிட அதிகப்படுத்திக் காட்டும். ஆசையும் மிகுதியானதாக இருக்கிறது. ஆகவே, எதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/31&oldid=562273" இலிருந்து மீள்விக்கப்பட்டது