பக்கம்:சிந்தனை வளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் ·5五

பயணத்துக்குத் தயாராவதற்காகச் சுத்தம் செய்யப்பட ரயில்வே யார்டில் நிற்கிறது.

சிறு திருட்டுக்குத் தேவையான கருவிகளுடன் ஒரு கும்பல் புகுந்து கக்கூவில் பதித்திருக்கும் எவர்ஸில்வர் பிளேட்கள், மின்விசிறி. ஆகியவற்றைக் கழற்றிக் கொண்டு டோகிறது. காவலுக்கு இருக்கவேண்டிய ரயில்வே பாதுகாப்புக் காவலர், மற்ருெரு மூலையில் சீட்டு விளையாடிக் கொண் டிருந்து விடுவதால் திருட்டு அவர்கவனத்திலிருந்து தப்பி விடுகிறது.

இன்னொரு மூலையில், சரக்கு ரயிலில் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. பல ரயில்வே புக்கிங் ஆபீஸ்களிலேயே, பத்திரிகை பார்ஸ்லால்ை பத்துப் பத்திரிகைகள், மாம்பழப் பார்ஸ்லானல் ஒரு டஜன் மாம்பழம் என்று, பார்ஸல் புக்கிங் ஆட்களே கேட்டு வாங்கிக் கொள்கிருர்கள். எங்கே கஸ்டமர் கொடுக்காமல் மறந்துவிடப் போகிருரோ என்று பொறுப்பாக ஞாபகப்படுத்திக் கேட்டு வாங்கிக் கொள்வதை எப்படிச் சமுதாயப் பொறுப்பின்மை என்று கூறமுடியும்? - -

சென்னையில், ரிஃபைனரியிலிருந்து வரும் எண்ணெயை நடு வழியில் ஒட்டை போட்டு எடுத்தவர்களைக் கைது செய்கி ருர்கள். பல நாள் இந்த எண்ணெய்த் திருட்டு நடந்த பின்தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது. தொடர்ந்து காலே. மாலை தினசரிகளைப் படிக்கும் போது, திருட்டு, பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது என்பது நமது தேசிய குணநலன்’களில் ஒன்ருகவே ஆகி விட்டதோ என்து கூடத் தோன்றுகிறது. காசு, பணம் எதுவும் திருட முடியாமல் அநாதைகளாகவும் அநாதரவாளர்களாகவும் பெண்கள், தாய்மார்கள் அகப் பட்டால் அவர்களிடமிருந்து உடம்பையும், கற்பையும் திருடுவது என்பது போலீஸ் ஸ்டேஷன் முதல் போக்கிரி களின் இருப்பிடம் வரை மாமூலாகி வருகிறது. பெண்களும். திருடப்படுகிரு.ர்கள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/53&oldid=562295" இலிருந்து மீள்விக்கப்பட்டது