பக்கம்:சிந்தனை வளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் . 77

வங்களும் வந்திருப்பாங்கங்கற நினைப்போட நடந்துக் கணும்' என்று நான் கண்டிக்க முற்பட்டபோதுத் "டோண்ட் பிக் அப் குவாரல்ஸ் லெட் தெம் நாட் .டிஸ்டர்ப்டு. இக்ளுேர் தெம்’ என்று அந்த அரும்பு மீசை, டி ஷர்ட் இளைஞர்களில் ஒருவர் என்னைச் சமாதானப்படுத்த முயன்ருர். பின்பு, அவர்கள் அங்கிருந்து மெல்ல எழுந்து நழுவியும் விட்டார்கள். கடைசியில் எனக்கும் துண்டு பீடி களுக்கும் நடுவே சண்டை மூண்டதுதான் மிச்சம்.

மற்ருெரு சமயம், நகரின் தனியான ஒரு குடியிருப்புப் பகுதியில் வீட்டு ஆண்பிள்ளைகள் எல்லாம் ஆபீஸ் போன பின், சரியான பகல் நேரத்துக்கு இரண்டு போக்கிரிகள் ஒரு வசூல் நோட்டும் கையுமாக ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து பெண்களை மிரட்டி ஐந்து, பத்து என்று பணம் கறந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்றைச் சொல்வி, நன்கொடை என்ற பெயரில் இவர்களது பலாத் கார வசூல் தொடர்ந்தது. மாதக்கணக்கில் அது

தொடர்ந்தது.

'பகல் நேரம் பூராவும் நாம ஆபீஸ் போயிட்டா அப் புறம் பொம்பளேங்க தனியாத்தான் இருக்க வேண்டியிருக்கு. வசூலுக்கு வருகிற ரெளடிகளோ பணம் தர முடியாது என்று மறுக்கிற வீட்டுப் பெண்களிடம், "ஏம்மா, நீ பவுட ருக்குச் செலவழிக்கலே? ஹேர் ஆயிலுக்குச் செலவழிக்கலே? இதுக்கு ஒரு அஞ்சு ரூவா குடுத்தா தேய்ஞ்சா போயிடுவே: ன்னு மிரட்டருங்களாம். அவங்களே விரோதிச் சுண்டா வேற வம்பு வருமோன்னு பயப்பட வேண்டியிருக்கு. அஞ்சு, பத்துச் தொலைச்சாத் தொலையறதுன்னு விட்டுட வேண்டி யிருக்கு சார்' என்று ஒரு படித்த சர்க்கார் உத்தியோகஸ் தர் என்னிடம் அலுத்துக் கொண்டார். எனக்கு வந்த கோபம் கொஞ்சநஞ்சமில்லை. - -

சட்டம், போலீஸ் எல்லாவற்றைப் பற்றியும் தெளி

வாக அறிந்திருந்தும்-கையாலாகாத்தனத்தினாலும், ஏனே தானே மனப்பான்மையிலுைம், போனல் போகட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/79&oldid=562321" இலிருந்து மீள்விக்கப்பட்டது