பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கயிறு அன்று, வீட்டுக்குத் திரும்பும் தெரு முனையில், காலடியில் ஒரு கயிறு அகப்பட்டது. அந்த முதிர்ந்த அந்திக்கு, கையில் எடுத்ததுமே அது உயிர் பெற்றிருக்க முடியும்; மாறாதது என் அதிர்ஷ்டம், என் தைரியம் என இப்போது சொல்லிக் கொள்கிறேன். சணல் கயிரு. அரைச் சுண்டுவிரல் தடிமனுக்கு, நல்ல முறுக்கேறி, ஒரு முழம்- சற்றுக் கூடுதலாக இருக்கலாம்வழி வழி. கழுத்தை நெரிக்க ஒரு முழம் போதாது? கைப்பிடிக்கு இன்னும் சற்றுத் தேவைப்படுமோ? யார் கழுத்தை? இப்படித் தோன்றுவதற்கு இன்றைய மனநிலை அப்படி, வேறு சமாதானம் என் சொல்வது? இப்படி எண்ணு- இப்படி எண்ணாதே- ஒயாத சாதகத்தால், மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள். நானும் முடிந்தவரை பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஊஹூம். எண்ணமாகத் தோன்றும் விபரீதம் செயலாகாத வரை, ஜயமுள்ளவரை பயமில்லை. எண்ணத்துக்கும் செயலுக்கும் இடை இழை கண்ணாடி அடியிலும் X ravக்கம்கூடக் கென்படா ந்கனை ஸ்ன்னம். கம்பி கு g) தி