பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 & சிந்தாநதி அடுத்து அம்பாளின் மடிதான் அடைக்கலம். அங்கு இடம் என்ன சுலபமா? இருந்தாலும் ஒம் புவனேஸ்வரியே நம: 女 亥 赏 இதைக் காலட்சேப மேடையாக மாற்றுவதாக எண்ணமில்லை. அதற்கு என்னிடம் சரக்கு இல்லை. எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. குங்குமத்தால் அர்ச்சிக் கவோ, மலர்களைத் துவவோ- ஊஹ-ம். வடமொழி எழுத்து வாலனைகூடக் கிடையாது. முதுகு நிமிர்ந்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து உட்காரக்கூடத் திராணி இல்லை. ஆனாலும் உட்காருகிறேன். சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன். ஓம் மாத்ரே நம: ஆரம்பமே அம்மா. ★ 女 אי ஆனால் இன்று-இடறி, இடறி நாமாக்களை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை. - ஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு. அவள் விளக்கில் இறங்கி, குத்து விளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப் பூவை எடுத்துத் தன் கூந்த லில் செருகிக் கொண்டது போல- முகம் காட்டவில்லைதலையின் பின்புறம்- அதையும் ஸ்துலமாகக் காண்ப தென்பது அத்தனை சுலப சாத்தியமா? சிரமமாகக்கூடச் சாத்தியமா? முதலில்- சாத்தியமா? 女 ★ 女