பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 & சிந்தாநதி ஒரு அக்ஷர சப்தத்தில், அடையாளத்தில்- கண்டு கொண் டவர் பாக்யம். மாசு, உங்களை நான் அடையாளம் கண்டுகொண்டேன். ஆனால் எந்த உச்சரிப்பில் நீங்கள் ஒளிந்து கொண்டீர்கள், இப்போது, மணலில் மறைத்து, மணலைப் பொத்தி விளையாடுவது போல்? மாசு, நினைவிருக்கிறதா? நாம் சந்தித்த புதுசு. எனக்கு ராயப்பேட்டையில் ஜாகை. நீங்கள் டவுன். இரவு எட்டு மணி வாக்கில் வருவீர்கள். மாசு, தாத்து, செல்வம், ரங்கநாதன் எல்லோரும் பேசிக்கொண்டு மரீனா வழியே நடந்து, தங்கசாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவன்-பூரி, பாஜி, சேறாட்டம் பால், அதன்மேல் கணிசமாக மிதக்கும் ஏடு. அப்படியே பேசிக்கொண்டே கோவிந்தப்ப நாயக்கன் தெரு, விளக்கு வெளிச்சத்தில், இரவு பகலாயிருக்கும். மார்வாரிப் பெண்டிர் வளையல்களும், பாதங்களில் தண்டையும் கொலுசும் குலுங்க, விதவிதமான வர்ணங் களில் மேலாக்குகள் சுழல, தெருவில் கும்.மியடிக்கையில்இது செளகார்பேட்டையா பிருந்தாவனமா? -அப்படியே பேசிக்கொண்டே, கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்குக் குறுக்கே வெட்டி, காந்தி இர்வின் சாலை வழி பேசிக்கொண்டே மீண்டும் மரீனா பீச், நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. பேசிக்கொண்டே பைகிராப்ட்ஸ் ரோடு, விவேகானந்தர் இல்லம், ஐஸ் ஹவுஸ் ரோடு, பெஸண்ட் ரோடில் என் வீட்டில் என்னை விட்டு விடடு, மணி இரண்டாகிவிடும்; பிரியா விடையில் டவுனுக்குத் திரும்புவீர்கள். நம் அத்தனை பேருக்கும் அதென்ன பைத்தியக்காரத்தனமோ? பேசுவோம். பேசுவோமோ, என்னதெல்லாம் பேசு வோம்! இலக்கியம், சினிமா, ஆண்டாள், நியூ தியேட் டர்ஸ், Saigal, கம்பன், துனியா ரங்க ரங்கே,” ஆழ்வாரா திகள், தேவகிபோஸ், தேவதாஸ், வித்யாபதி, பாரதி, ராஜாஜி, நேரு, அத்வைதம், விசிஷ்டாத்வைதம்,