பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 31 கம்யூனிகேஷனில் எத்தனை விதங்கள், ஸ்வரங்கள், ஸ்ருதிகள், அதிர்வுகள், உருவங்கள், உருவகங்கள், நயங்கள், நயனங்கள் ! ★ ★ ★ திடீர் திடீர் எனக் காரணம் தெரியா மகிழ்ச்சி. இனம் தெரியா-துக்கம். உடனே ஏக்கம். ராக் ரஞ்சித். ராக் துக். வரிகளை மடித்து எழுதினால் மட்டும் பிராசத்தால் மட்டும் கவிதை உண்டாகி விடாது. வசன கவிதை ஆகி விடாது. கேட்கிறேன். உள்ளபடி கவிதைக்கும் வசனத்துக்கும் என்ன வேறுபாடு ? பொருளின் முலாம் ஒசையா? ஒசையையும் அடக்கித் தான் பொருளா? ஒசைக்கும் பொருளுக்கும் நிக்கா மேல் இழுத்த திரைதான் வார்த்தை? அது கவிதையோ வசனமோ எதுவானால் என்ன? எல்லாம் கவித்வமே. கெளரி கல்யாண வை போ க மே நித்ய கல்யாண வை போ க மே கவிதா கல்யாண வை போ க மே