80❖சிந்தாநதி
அவனுடைய சமையல்! சமையலா அது? "அம்ருத் ராமா, அம்ருத்!'
அப்போ அஞ்ஞாத வாசத்தில் நளன்.
நானே பார்த்தேன். அடுப்பிலிருந்து சுடச்சுட சப்பாத் தியைத் தோசைத் திருப்பியில் கொண்டு வந்து அவர் கலத்தில் போடுகையில், அவன் பொன்னிறம், தங்கத் தகடு லேசு, கத்தரித்து எடுத்தாற் போன்ற வட்டம், பார்க் கவே வாயில் ஜலம் ஊறிற்று. கூடவே அவன் 'சிக்கனை' அதன் மேல் வடிக்கிறானே! இல்லாவிடில் நானும்...
"ராமா, இந்த ஆள் செய்யற நான்- விஜ் டிஷஸ் இங்கே இல்லை. சிங்கப்பூர், ஜப்பானில், பெரிய ஓட்டலில் இவன் ட்ரெயினிங் எடுத்திருக்கணும். ராமா,ஐ ம் லக்கி."
சமான்களின் கணக்கை அவன் சீட்டில் குறித்து, சீட்டுமேல் சில்லரையையும் ஸேட் எதிரில் வைத்துவிட்டு, அவன் பாட்டுக்கு மேல காரியத்துக்குப் போய்விடுவான். அனாவசிய சகஜம் கொண்டாடவில்லை. பேச்சிலே கொஞ்சம் பிகுதான்.
இதெல்லாம் கிடக்கட்டும். இவை அவன் வேலை.
மொட்டை மாடியில் வேப்ப மரத்திலிருந்து, ஜமக்காளம் விரித்தாற் போன்று உதிர்ந்திருந்த பூ, இலை, சருகு, செத்தையை அப்புறப்படுத்தி, வீட்டுக்கு ஒட்டடை அடித்து, சோப்பும் பினாயலும் பக்கெட்டில் கரைத்து வாரம் ஒரு முறை மாடி பூரா அலம்பி, அது அதுக்கு அதனதன் இடம்.
அடுக்கி,சீர்படுத்தி,
நாற்காலி, சோபாக்களுக்கு உறை மாற்றி, படுக்கையை வெய்யிலில் காய வைத்து உதறி, திரும்பப் போட்டு,