பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174


பொருளாழம் உடைத்தனவாய் அமைத்துள்ளார். கவி வளம் நனி சொட்டச் சொட்ட அவற்றை செய்யுட்களாக வடித்துள்ளார். ஓசை நயம் ததும்புவனாக அவற்றைக் கவிதை உருவில் அளித்துள்ளார். சந்தர்ப்பத்துக்கும் சூழலுக்கு ஏற்ப அவற்றைப் பல் சுவையும் வழிந்தோடு வனவாகப் பா வடிவில் தீட்டியுள்ளார். சுருங்கக்கூறின் தமிழ் மரபை பேணும் அதே நேரத்தில் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணாகாத வகையில் நபிகள் நாயகம் முகம்மது (சல்) அவர்களின் வாழ்க்கையோ நெருங்கிய தொடர்புடைய வரலாற்று முக்கியத்துவம் நிகழ்ச்சிகளைத் தத்ரூபமாக வருணிப்பதில் உமறுப்புலவர் மாபெரும் வெற்றி ஈட்டி உள்ளார் எனக் கூறின் அது மிகையாகாது.