369
வளைவுகள், இயற்கை எழில், யாவும் தமிழகச் சூழலிலேயே பிரப்படுகின்றன.
புலவர் பனீ, சின்னச்சீறாவினை "தீன் நபி இறசூல் சிறாச் சரிதையில் சிறிது சொல்வோம்" என ஆரம்பிக்கின்றார். இறுதியில் "தூய செந்தமிழ்"-"கோவை" என்று புலவர் கூறும் திறன் ஓர்ந்துணரத்தக்கது. ஆம்! உமறுவின் சீறாக் கோவையாக ஹிஜ்ரத்துக் காண்டத்தின் தொடராக உறனிக் கூட்டத்தார் படலத்தின் கோர்வையாக சின்னச்சீறா பாடியளிக்கப் பெற்றத றோ! ஹிஜ்ரத்துக் காண்டத்தின் தொடர் இணைப்பாகப் பாடும் சின்னச் சீறாவினை இறசூல் காதை" [7, 12] "நபி இறசூல் காதை" (13) "இறகுல் புகழ்" [ ] என பனீ அகமது மரைக்காயர் பகர்கிறார்.
சினைச்சீறாவை முதன் முதலில் பதிப்பித்தவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதுமான் லெப்பை என்பவரின் புதல்வர் பக்கீர் முகியித்தீன் என்பவர். இவரே நூற்பதிப்பு துறையின் முன்னோடியாவர்.[1], இஸ்லாமிய இலக்கிய ஏட்டுப் பிரதிகளைத் தேடி, அவற்றைப பரி சோதித்து, முதன் முதலில் வெளியிட்டவர், நூற்பதிப்புத் துறையில், சி. வை. தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் போன்றோருக்கு முற்பட்டவருமாவார்.
உமறுப்புலவர்-தம் கொடை நாயகரான வள்ளல் அபுல் காசீம் மரைக்காயருக்கு நன்றி பாராட்டும் தன்மையினை நாட்டுப் படலம் (41) தீனிலைக் கண்ட படலம் (110)
(2) இலங்கை S. M. கமாலுதீன் 'இலங்கை முஸ்லிம்களின் இலக்கியமரபு'
24
- ↑ 1. (1) கலாநிதி அல்ஹாஜ் ம மு. உவைஸ்'முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள்"