பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

கலையா பிறந்து கொண்டிருந்தது சினிமா உலகில் வெறும் கேலிக்கூத்து, கழுதைக் கூத்து. கச்சா பிலிம் கரியாக்கப்படும் திருப்பணியும். காமக் களி யாட்டமும் தான் கூத்திடுகின்றன. இன்றைய சினிமா ஸ்டுடியோ பூமியிலே. - சினிமா என்பது மகா சக்தி வாய்ந்த உயரிய கலை. பல கண்களின் உன்னத இணைப்பு, எண்ணற்ற நுண் ணிய தொழில்களின் கூட்டு. நுணுக்கம் நிறைந்த நிபுணத்தவத்தின் உயிர்ப்பு. சினிமாக் கலையை நேரிய முறையில் கையாண்டால் நாட்டு நிலையை உயர்த்த முடியும். சமுதாய வளர்ச்சிக்குக் துணை புரிய இயலும், அறிவுக்குப் பேரொளி காட்ட முடியும். ஆயிரமாயிரம் தொழிலாளித் தோழர் களின் உழைப்பை அமரத்துவமாக்க முடியும். கலை யின் காவியத்தின் இலக்கியத்தின் உயர்வை எங்கும் எடுத்துக் காட்ட முடியும். ஆனால் இன்று கலைஞர்கள் கருதுவது என்ன? கலைவன்பர்களின் தவிப்பு என்ன? ரசிகர்கள்,அறிஞர் கள், அரசியல் தலைவர்கள், நினைப்பதுடன் நில்லாது பிரசாரம் செய்து வருவதும் என்ன? சினிமா சமூகத்தின் புல்லுருவி, நாகரீக நச்சுப் பாம்பு, மனிதப் பண்புக்கு உலை வைக்கும் உணர்வு கொள்ளி. இப்படி எண்ணி எண்ணி, இந்த சினிமாக் கலை நாசமாகாதா என்று சபிக்கத் துடிக்கிறார்கள். இதைச் சொல்லோவியமாக்கி யிருக்கிறார் கவி ஞர் பாரதிதாசன்: