பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13


டைரக்டர் அம்மாளைக் கிருஷ்ணனாக உருவாக்கி விட்டிருப்பார். அதற்கு பாராட்டுகள் கிடைத்திருக்கும். அப்புறம் பிடித்தது சனி முன்னுக்கு வந்து விட்ட ஸ்ரீமதி நட்சத்திரங்கள் எல்லோரும் கிருஷ்ணனாகிவிடுவது தவிர வேறு விலக்கு கிடையாது. பீப்பாய் மாதிரி நடுவிலே பெருத்த தடிக் கிருஷ்ணன், மார்பு புடைத்த கண்ணன், துடிக்கும் சதைப் பிண்டங்கள்பெற்ற கோபாலன் இப்படிப் பலப்பல பலபல! இந்த லட்சணத்திலே இந்த 'அம்மாமிகள்' ஆடவேறு துணிந்து விடுவார்கள் தசாவதார லீலா வினோத ஆட்டங்கள்-கோரங்களுடன் கொஞ்சுகிற காதல் நடனங்கள்-சகிக்க வொண்ணாத கழுத்தறுப் பும் கலைக்கொலையும் தவிர வேறென்ன? பெண்கள் எதற்காக ஆண் கடவுளர்கள் வேஷ மிட்டு வரவேண்டும்? குறிப்பிட்ட கடவுளர்கள் ஆண்கள் எனக் கதையும் பெயர்களும் சொல்லும். ஆனால் நம் கண்முன் நிழலாடும் உருவங்களின் செயல்களில் பெண்மை படிந்திருக்கும். இந்த லீலைகளால் கடவுளர்கள் ஆணும் பெண்ணு மிலாப் பிறப்புதான் போலும் என வருங்கால ஆராய்ச்சியாளன் முடிவு கட்டினால் அவன் அறிவை யாரும் சந்தேகிக்க முடியாது! அவர்கள் தலையை அசைப்பதும், கண்களை வெட்டுகிற தினுசும், சுழற்றுகிற பான்மையும் சொற்களை உதிர்க்கின்ற தினுசும் அந்தப்புரங்களில் கொஞ்சிடும் கலையன்றி வேறறியாச் சுந்தரிகளே இவர் என்று அம்பலமாக்குகின்றன .