பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

3. காமனைக் காய்ந்தவர


திரையிலே ஒரு.படம் ஆடிக்கொண்டிருந்தது. கச்சா பிலிமைக் கரியாக்கிய பச்சைப் பாடாவதிப் படம் அது. அதைப் பற்றிய குணதோஷ ஆராய்ச்சி யில் இறங்க வரவில்லே இங்கு. அதில் கண்ட அற்பு தம் ஒன்றை இங்கு அவசியம் குறித்தாகவேண்டும். தமிழ்ப்பட முதலாளி, வசன கர்த்தா, கதாசிரி யர் முதவிய கலைக் கொலைக் கும்பலின் முதல் ரக முட்டாள்தனத்துக்கு சரியான எடுத்துக்காட்டு அது. காமவெறி பிடித்தலையும் காலிகள் சிருஷ்டித்து தமிழ் நாட்டின் கலையிலே கட்டிவிட்ட கேலிக்கூத்து அது. புகழ் வெறியும் பண வெறியும் பற்றிய சிலர் தமிழ்ப் பண்பையும் இலக்கிய, கலை நகங்களையும் மறந்து கண்டபடி உருவாக்கிய குப்பை அந்தப் படம். அதில் இப்படி ஒரு அற்புதம் வருகிறது: கண வனைத் தேடிச் செல்கிறாள் இளம் பெண். இர வில் தங்கியிருக்க ஒரு வீட்டை நாடுகிருள். அங்கு ஆணும் பெண்ணுமாய் வாழும் ராட்சச உருவங்கள் போராடி, பின் கதவைத் திறக்கின்றன. கு ம ரி உள்ளே செல்கிறாள். சிறிது நேரத்தில் அந்தக் கொடி யன் மிருக வெறியுடன் அவளைப் பிடித்து இழுக்கி றான், அவள் அலறியடித்தத் தப்ப முயல்கிறாள். அப் படியும் விடாமல் துரத்துகிற காம வெறியன் முடி வில் தான் கடவுள் என்று காட்சி தருகிறான் சிவனாக வந்து அப்போதைக்கு தலைநகர் செல்லும் பாதையை யும் காட்டி வாழ்த்துகிறானாம்! -