பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23 கும்பல் கும்பலாகக் கூடினார்கள். அவர்கள் கதை வசனம் திறமை, நடிப்பு என்கிற விஷயங்களைக் காணக் கூட வில்லை படம் ஆடிப் பாடிப் பேசும் அதிசயத்தைப் பார்க்கவே குவிந்தனர். அத்தன்மை யில் அவர்கள் பல இரவுகள் கண்ட நாடகங்கள் படங்களாக ஆடுவதை அ றிந்து மலிவான பொழுது போக்காக அமைவதை உணர்ந்து சினிமாப் பார்க்கக் கூடினார்கள் கடவுள்கள் விளையாடும் பேசுகிற படங்கள் அதிகமான பெண்களைக் கவர்ந்தது. அவர்களுக்குப் பரிச்சயமான புராணக் கதைகள், கடவுள் லீ லைகள் - சினிமா ஓர் சாபக்கேடு எனப் பேசும் கிழடுகட்டை களைக்கூட, போன தலைமுறைப் பதார்த்தங்களைக் கூட - புண்ணியமானது என்ற தன்மையில் இழுத் தன. சமூகப் படங்கள் என்றால் குடியும், தாசிவீடும். அநாகரிகமான ஆட்டபாட்டங்களும் உள் ள தே என்று படமுதலாளிகள் எண்ணி வருவதனால், அந்த ரீதியில் பிடிக்கப்பட்ட சில படங்கள் வெற்றி தர வில்லை. அவை மட்டரகமான படங்கள். த ங் க ள் முயற்சியில் தான் தவறு உண்டு என அறியமுடி யாத படக்கலை பிரம்மாக்கள். அந்தப் படத்தைப் பார்க்கக் கும்பல் கூடாததனாலும், தரைமகா ஜனங் களும் ஸ்திரீகள் சமுதாயமும் புராணப்படங்களுக் கும். இதிகாச ஸ்டன்டுகளுக்கும் அமோகமான வர வேற்பு அளித்ததனாலும் தமிழ்நாட்டு ரசிக உள்ளப் போக்கையே எடை போட்டு விட்டதாகப் பெருமை பேசி குப்பைப் படங்களேயே சுட்டுத் தள்ளினார்கள். இதில் போட்டி ஏற்பட்டது,