பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

花鬍 'வா!' என டைரக்டர் உத்திர விட்டால் குபீரென கிளம்பி முளைத்து

நிற்பார் கடவுளர். மாயமாய் மறைவார். இப்படியாக மரத்தடியிலும், தண்ணீர் கரையிலும் வீட்டிலும் காட்டிலும் தலைகாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது படக்கடவுளுக்கு! பத்தினி பக்தியுடன் அமர்ந்து கண்ணீர் வடிக்க உபயோகப்படுகிற . பண்ருட்டி பொம்மையும் ,மண்சிலையும், அட்டை உருவமும் திடீரென வெடித்தோ மறைந்தோ

பரமசிவனை யும், கிருஷ்ணனை யும் கக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டது. இது மாதிரி அவசியம் இல்லாவிட்டாலும் கூட, பட முடிவிலாவது பரமசி வம் கம்பெனியார் அந்தரத்திலே தோ ன் றி கைய சைத்து வாழ்த்தியாவது தீர்ப்பது என்று சட்டமியற்றிவிட்டனர் படநிபுணர்கள்.

கடவுளர்களின் போக்குக்கு புதுமை பூசுவதற் காக அவர்களைக் காமவெறியர்களாக்கி விடுகிறார்கள். சிவன் யாரையாவது தேடி அலைகிறான். திருமால் தான் கோகுலக் கன்னியர் பின் அலையும் கோலோகக் கடவுளாயிற்றே! அக்னி தேவன் ரிஷி பத்தினியை அணைய முடியாமல் வாடிவதங்கி உருகித்தவித்து மெலிகிறானாம்! அடா அடா! வ ச னம் இவர்களிடம் படும் பாடு-என்ன சொல்ல! இப்படியாகத் தானே பரமசிவம் பார்ட்டியாரும் திருமால் விலாசத்தினரும் இதர பரிவாராதிகளும், அவர்களது பூலோக வாரிசுகளான நாயன்மார்களும் ஆழ் வாரா திகளும் படாதபாடு படுகிறார்கள். இந்தக் கும் பல் தான் அப்பாவிகள் போலும்! புத்தன் கதையைப் படம் பிடிப்போம் என்று சொன்னவுடனேயே பிடியாதே! புத்த பிரான் பெய