பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

 தமிழ்ப்படக்கலை உருப்பட வேண்டுமானால் பெருத்த பணப்பைகளும் சிறுத்த தலைகளும்,உடைய மண்டூகங்கள் படமுதலாளி ஸ்தானத்திலிருந்து கவிழ்க்கப்பட வேண்டும். அவர்களை ஸ்டுடியோ பூமியிலிருந்தே துரத்திவிட வேணும்.உழைப்பை,திறமையை, மக்கள் சமுதாயம் மாண்பை, அறிவின் வளர்ச்சியை மதிக்கும் அறிஞர்கள், உழைப் போர் ஒன்றாகி பொதுவான ஸ்தாபன ரீதியில் (Peoples Theatre Move: ment) படக்கலையை வளர்க்க முயலுதல் நன்று.மிகுந்த வருவாய் உடைய தொழிலான சினிமாவை சர்க்காரே தனது கண்காணிப்பில் எடுத்து நன்றாக நிர்வகிக்க வேண்டும், இவை உடனடியாக நடவாதெனில், கவிஞர் கூறியது போலவாவது காரிய மியற்றுகிற தாராள மனோபாவம் பெற்ற சில செல்வர்கள் தேவை.


பயன் விளைக்கும் விதத்தினிலே பல செல்வர் கூடி இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்து படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும் படமெடுத்தாடும்: தமிழர் பங்கமெலாம் போதும்'


இந்த நிலை ஏற்படாதவரை, தீவிரவாதிகளான இலக்கியாசிரியர்களும், ஆர்வமுள்ள லட்சியவாதி களும் பட உலகில் தனித்தனியாக டஜன் கணக்கில் புகுந்தாலும் எத்தகைய விமோசனமும் ஏ ற்படாது. ஏனென்றால், முதலாளிகளை அண்டி வாழும், அவர்கள் தயவை நாடும்...அடிமைகளாகத் தானே