பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

 படுத' ஒன்று பின்னணியாக விளங்கியது. அள்ளித் தெறித்த புள்ளிகளும் பொட்டுகளுமாக மேலே ஜோடனைத் திரையின் பொருள் என்னவோ எனக் குப்புரியவில்லை வெள்ளிகள் மின்னுகிற வியன் வானத்தின் சூசகமாக இருக்கும் என்ற நண்பருக்கு 'ஓகோ' என்று குரல் கொடுத்தேன்.

"அதோ, அங்கே பாரும் ஐயா மகாவிஷ்ணுவை!"என்று கவனத்தைத் திருப்பினார் நண்பர் வேறு திசைக்கு. விழி வண்டுகள் தாவின. விழித்தேன். நன்றாக விழித்து நோக்கினேன். .

'யாரோ ஒரு ஸ்ரீமிதி, .....'

அதனால் தானே சொன்னேன் ஸ்ரீமதி மகா விஷ்ணு என்று, அவள் பாப்பா'

பாப்பாவா ! கிழவியாகி விட்டவளைப் போய்..."

நண்பர் முறைத்தார்: கத்தாதீர் வீணாக. பெண் கிழவியானாலும் சரி. பிள்ளைகள் பல பெற்ற அம்மா னாகி விட்டாலும் சரி-சினிமா உலகைப் பொறுத்த வரை பேபி, குமாரி. மிஸ், பாப்பா இப்படித்தான் இருப்பாள். சினிமா உலகம் இருக்கிறதே, இட்ஸ் எ ஒண்டர்புல் திங்'


நண்பர் பேச்சைப் போல்தான் விசித்திரமாக இருந்தது அங்கு நான் கண்ட விஷயங்களும், அதை விட அற்புதங்கள் நிறைந்தது சினிமா உலகம், அதில் திரிகிற கலைப் பிர்மாக்கள். அபார அசகாய சூரர்கள் என்பதை உணர முடிந்தது.

நான் ஸ்ரீமதி மகாவிஷ்ணுவைப் பற்றி அல்லவா சொல்ல வந்தேன்! அந்த ஸ்ரீமதி ஒரு நாற்காலியிலே