பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் - #17 இ கிரிகரி மறுக்கும் முறையில் லேசாகச் சிரித்து விட்டுச் சொன்னன்: 'நானே அதைக் கண்ணுல் கண்டேன். கேற்று போலிஸ்காரன் காஸரோவ் செத்துப் போன பிறகு என் தாடையில் ஒரு குத்து விடுவதற்கு இருந்தான். கான் அவனை சவக்கிடங்கிற்குத் தாக்கிக்கொண்டு போனேன். திடீரென்று அவன் தனது இடது புறத்தால் உந்தின்ை. நான் குனிந்து தப்பிக் கொள்வதற்குக்கூட நேரம் போத வில்லை. இது உனக்கு எப்படிப்படுகிறது?' அவன் கொஞ் சம் அளந்து விட்டான். ஆனல் அது தானகவே அப்படி வங்தது; அவளுக எண்ணிப் பேசியதில்லை. எல்லையற்ற பசிய வயல்களையும் லே வானேயும் நோக்கியிருந்த ஜன்னலோடு மிகவும் சுத்தமாக விளங்கிய அந்த அறையில் அமர்ந்து தேநீர் பருகுவதை அவன் ரசித்து மகிழ்ந்தான். அவன் விரும்பிய மற்றுமொரு அம்சமும் உடனிருந்தது. அது தன் மனைவியா, அல்லது தானே தான என்பதில் அவனுக்கு நிச்சயம் ஏற்படவில்லை. ஆயினும் எல்லாவற்றையும் விட, தனது இயல்பின் சிறப்பான தன்மையை விளம்பரப்படுத்தவே - அன்றைய தினத்தின் தனிநாயகனகப் பிரகாசிக்கவே-அவன் ஆசைப்பட்டான். "கான் மனம் வைத்துத் தீவிரமாக உழைக்கத் தொடங்கி விட்டால்,பூமியே அதிர்ந்துவிடும்.முதலாவதாக, நீயே பாரு. கான் எனது காரணங்களைச் சொல்கிறேன். இங்கே இருக்கிறவர்கள் - அவர்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்களே இல்லை.” - அவன் டாக்டரோடு நிகழ்த்திய சம்பாஷணையை அவளுக்குச் சொன்னன். இதிலும் தன்னை அறியாமலே மிகைபடுத்தித் தான் அவன் பேசினன். இது அவனுடைய மனநிலையை முன்னேவிட குஷியான தன்மைக்கு உயர்த்தி விட்டது.