பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னஞ் சிறு பெண்

3



“ரொம்ப என்று சொல்வதற்கில்லை. நாங்கள் இன்னும் நடந்து போக முடியும். நகர்ந்து நகர்ந்து போய் விடுவோம். எல்லாம் கடவுள் கிருபைதான்.”

“இப்படி வருவதாக நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டீர்களா? அல்லது,வயோதிக கால யாத்திரையா?”

"நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டோம் : அந்நியனே. கீவ், ஸோலோவ்கி ஆகிய மடங்களில் உள்ள பரிசுத்த சாதுக்களை வேண்டிக் கொண்டு நாங்கள் பிரார்த்தனை செய்தோம். ஒரு நேர்த்திக்கடன்” என்று கிழவன் சொன்னான். பிறகு, தன் துணைவியின் பக்கமாகத் திரும்பி, "வா அம்மா. நாம் இங்கே உட்கார்ந்து நம் எலும்புகளுக்குச் சிறிது ஒய்வு கொடுக்கலாம்' என்றான்.

“அப்படியே செய்வோம்” என்றாள் அவள்.

ஆகவே நாங்கள் அங்கு பாதை ஒரத்தில் வளர்ந்து நின்ற முதிய வில்லோ மரம் ஒன்றின் நிழலில் அமர்ந்தோம். அன்று உஷ்ணம் அதிகமாக இருந்தது. வானத்தில் மேகங்களே இல்லை. எங்களுக்கு முன்னாலும் பின்னாலும், கானல் வெயில் படிந்த தொலைதுாரம் நோக்கி அந்த ரஸ்தா வளைந்து சென்றது. அமைதியும் தனிமையும் நிறைந்த இடம் அது. ரஸ்தாவின் இரு புறங்களிலும் ரை தானியத்தின் நோய் விழுந்த பயிர்கள் நின்ற வயல்கள் பரந்து கிடந்தன.

கிழவன், தான் பிடுங்கி எடுத்த பயிர்த் தண்டுகள் சிலவற்றை என்னிடம் நீட்டிக் கொண்டே, “இவை நிலம் வறளும்படி உறிஞ்சி விட்டன” என்று சொன்னான்.

கிலத்தைப் பற்றியும், அதன் கருணையை நம்பி வாழ வேண்டிய கொடுமை பெற்று விட்ட விவசாயிகளைப் பற்றியும் நாங்கள் பேசினோம். எங்கள் பேச்சைக் கேட்டுக்