பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்லோவ் தம்பதிகள் 167 பெரிதாக ஏதாவது செய்தாக வேண்டும் எனும் ஏக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது. இந்த உலகத்தையே பொடிபண்ணிவிடுவது, அல்லது கொள்ளைக்காரர் கூட்டத் துக்குத் தலைமை வகிப்பது அல்லது, மற்றவர்கள் எல் லோருக்கும் மேலானவனுக என்னே ஸ்தாபிக்கக் கூடிய ஏதோ ஒன்றைச் செய்து அப்படி மேலே ஏறி மற்றவர்களை எல்லாம் அலட்சியமாக நோக்கி அவர்கள் மீது காறித் துப்ப வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. நான் அவர்களைப் பார்த்து இவ்விதம் பேசுவேன்-ஏ இருமிகளா! நீங்கள் எதற்காக உயிரோடு இருக்கிறீர்கள்? எப்படிப்பட்ட வாழ்க்கைகளை நீங்கள் வாழ்கிறீர்கள்? நீங்கள் எல்லோரும் இரட்டைமூஞ்சி படைத்த சுரண்டல் காரர்கள் தவிர வேறென்றுமில்லை. உண்மையிலேயே நீங்கள் இப்படிப்பட்டவர்கள் தான்' என்பேன். அதன் பிறகு அந்த உச்சாணி உயரத்திலிருந்து நான் அடித்துப் புரண்டு கீழே தலைகுப்புற வந்து விழுவேன். தடால்! அது தான் முடிவு ஆகும். வாழ்க்கை எவ்வளவு அசமந்தமாக வும் மப்பாகவும் இருக்கிறது! மேட்ரோனவை விட்டு விலகியதும் எனக்கு கானே சொல்லிக் கொண்டேன்! கப்பல நேரே விடு, கிரிகரி. நங்கூரத்தை நீக்கியாச்சு'. ஆளுல் அது அந்த விதமாக நடைபெறவில்லை. தண்ணிரில் ஆழம் இல்லை. நான் ஒரு பாறையில் மோதிக் கொண் டேன். அதிலிருந்து நான் உயர்ந்தும் வறண்டும் போய்க் கொண்டிருக்கிறேன். அதனுல் கான் தரையோடு தரை யாகி விடுவேன் என்று அர்த்தமில்லை. நானல்ல அது. நான் என்ன செய்ய முடியும் என்பதை மக்களுக்கு கிரூபித்துக் காட்டுவேன். எப்படியோ சைத்தானைத் தவிர வேறு யாரும் அதை அறியார்... என் மனேவியா? அவள் நரகத் துக்கு ஒழிந்து போகட்டும் என்னைப் போன்ற ஒருவன் மனைவியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அல்லது,