பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு குழந்தைகள் 31 அவன் தலையை லேசாக ஆட்டி விட்டு, "நல்லது. நாம் சாப்பிடலாம என்றுன். அது வரை, முன்னுல் உள்ள ரொட்டியையும் மசாலை யிட்ட இறைச்சியையும் பசியோடு பார்த்துக்கொண்டு பொறுமையோடு இருந்த காட்கா "சாப்பிடலாம்” என்று ஆமோதித்தாள். இப்படியாகத்தானே, போதுமான வெளிச்சம் இல்லாத பொது விடுதியின் ஈரக் கசிவும் நாற்றமும் நிறைந்த மறைவிடத்தில் அமர்ந்து, அசிங்கமான பாட்டுக்களும் கடுமையான வசவுகளும் பின்னணி இசையாக ஒலிக்க, அவர்கள் தங்கள் இரவுச் சாப்பாட்டை சாப்பிட ஆரம் பித்தார்கள். அவர்கள் இருவரும் உணர்ச்சியோடும், தேர்ந்து ஆராயும் பண்போடும், சிறு சிறு இடைவேளை களுடனும்,தேர்ச்சி பெற்ற சாப்பாட்டு ரசிகர்கள் போலவே சாப்பிட்டு மகிழ்ந்தார்கள். தனது ஒழுங்கு முறையை மறந்து விட்டு காட்கா, கன்னங்கள் துருத்திக் கொண்டு நிற்க, கண்கள் பிதுங்க, பேராசையோடு எதையாவது கடிப்பதைப் பார்த்து விட்டால், அமைதி கிறைந்த நிறைந்த மிஷ்கா தயையுள்ள குரலில் சொல்வான். வேகம் அதிகமாகி விட்டது. இல்லேயா, அம்மணி? அதைக் கேட்டதும் அவள் அப்படிக் கடித்த துண்டை விழுங்கி விட அவசரப்பட்டு அதன் காரணமாக விக்கித் திணறுவாள். இது தான் என்னுடைய கதையின் முடிவு ஆகும். தங் களுடைய கிறிஸ்துமசுக்கு முக்திய நாள் மாலே .ே வ ளே நிகழ்ச்சியை உல்லாசமாகக் கொண்டாடி முடிக்கும்படி அக் குழந்தைகளே விட்டு வைப்பதில் எனக்கு எவ்வித மன வேதனையும் கிடையாது. அவர்கள் குளிரினல் மாண்டு விடக் கூடிய ஆபத்து எதுவும் இல்லை என்பதை