பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள், - 35 அந்தத் துவாரத்தின் அடியில் இரண்டு பேர் சண்டை யிட்டுக் கொண்டிருப்பதை, அம் முயற்சியில் உறு மி க் கொண்டும் ஏசிக் கொண்டும் திணறுவதை, கான முடியும். "நீ என்னேக் கொன்று விடுவாய்' என்று அந்தப் பெண் சிரமத்தோடு சொன்னுள். பயமே வேண்டாம்'என்று அவள் கணவன்,கூட்டித் திரட்டிய விஷயத்தை சொற்களிலே சேர்த்து அவளைத் தேற்றின்ை. - - தொடர்ந்து, மென்மையான எதன் மீதோ கனத்த ஊமை அடிகள் விழும் ஓசை வந்தது. அப்புறம் கீச் சொலிகள், முனகல்கள், பெரும் சுமை ஒன்றைத் துரக்கு கிறவன் வெளியிடுவது போல யாரோ சிரமமாக மூச்சு விடும் சத்தம் எல்லாம் கேட்டது. - . "ஒ ஓ கடைசியாக அதை எடுத்து அவன் அவளுக்கு ஒரு அறை கொடுத்தானே பார்க்கணும்' எ ன் ரு ன் சென்.கா. கீழே அடித்தள அறையில் நடைபெறுவதைக் கவனித்து, வெளியில் தன்னைச் சுற்றிலும் கூடி நின்ற சிறு கும்பலுக்கு விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். - இரண்டு மேஸ்திரிகள், லெவ்செங்கோ எனும் பெய ருள்ள வேலைக்காரன் ஒருவன், கிஸ்லியகோவ் என்கிற வாத்தியக்காரன், இலவச வேடிக்கை காண்பதில் ஆர்வ முள்ள இன்னும் சிலர் ஆகியவர்களே வழக்கமாக அங்கே கூடி நிற்பார்கள். அவனிடம் அடிக்கடி கேள்விகள் கேட் டுக் கொண்டும், பொறுமை இழந்தவர்களாய் அவன் கால் களையும், வர்ணம் ஊறிப் போயிருந்த் கால் சட்டையையும் இழுத்து இழுத்தும் அவர்கள் அவசரப் படுத்துவார்கள்.