பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 氨〕 ஆர்லோவ் தம்பதிகள் பங்களில் அவன் மிகவும் மூர்க்கமாக இருப்பான் என்பதை அங்குள்ள அனேவரும் அறிவர். மந்தமான ஒருவித ஆத்திரம் உள்ளத்தைக் கவ்வி மூச்சுத் திணறும்படி பற்றிக்கொண்டிருக்க, அவன் அதே இடத்தில் உட்கார்ந்திருப்பான். அவனது நாசிகள் துடிக்கும். உறுதியான பெரிய மஞ்சள் சிறப் பற்களின் இரு வரிசைகளும் வெளியே தெரியும்படி அவன் உதடுகள் மடிந்து சுருளும் இரு ண் டு உருவமற்று எழும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளே குமுறிக்குமையும். அவன் கண்களின் முன்னல் செம்புள்ளிகள் மிதக்கும். கடுங் துயரமும் வோட்கா மது தேவை என்ற வெறியும் அவனது அங்கங்களைக் கவ்வி உறிஞ்சும் குடிதான் தனக்கு ஆறுதல் அளிக்கும் என்பது அவனுக்கு கன்ருகத் தெரியும். ஆனால் இன்னும் இருள் பரவவில்லை. அவனிருந்த அலங்கோலமான அவல நிலையோடு வீதிகளின் வழியே நடந்து போக அவன் வெட்க முற்ருன். ஏனெனில் அவன-கிரிகரி ஆர்லோவைஅறியாதவர் எவருமிலர். - . ஊராரின் பெருஞ் சிரிப்புக்கு ஆளாக அவன் விரும்ப வில்லை. ஆனாலும் வீட்டினுள் சென்று, முகத்தைக் கழுவி, வேறு ஆடைகள் அணிந்து கொண்டு கிளம்பவும் அவன் மனம் ஒருப்பட வில்லை. அவன் அடித்து உதைத்த அவனுடைய மனேவி அங்கே தரையில் விழுந்து கிடந்தாள். அவ்வேளையில் அவள் சகல தன்மைகளிலும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவளாகத்தான் அவ னு க் குத் தோன்றினுள். . . . . . . . . . ‘. . அவள் அங்கே அழுது கொண்டே கிடந்தாள். தனது கட்சிதான் சரி, தான் அவனிடம் குற்ற மற்ற பலியாக அகப்பட்டு அவதியுற கேர்ந்தது என்பது அவளுக்கு நன்கு தெரியும். அதை அவனும் அறிவான். அவள் கட்சிதான்