ஆர்லோவ் தம்பதிகள் 67 அவமரியாதைகளையும் அடி உதைகளையும் பற்றி கினைத் துப் பார்ப்பாள். உடனே அவளுக்கு அழுகை வந்து விடும். மெதுவாக அழுது கொண்டு குறை கூறுவாள் அவள். அவளது மென்மையான குறை கூறல்களினல் உள்ளக் கிளர்ச்சி பெற்று அவன் மேலும் தீவிரமாக அவளேக் கொஞ்சுவான். அதனுல் அவள் இன்னும் அதிகமாகக் கண்ணிர் வடிப்பாள். இறுதியில் இது அவனுக்கு எரிச் சலேயே தரும். சரி சரி. உன் ஒப்பாரியை நிறுத்து. நான் உன்னே அடிக்கிற போது அது உனக்கு எவ்வளவு வலி உண்டாக்கு கிறதோ, அதைவிட ஆயிரம் மடங்கு வேதனை எனக்கு ஏற்படக் கூடும் தெரியுமா? அதேைல நீ உன் வாயை மூடிக் கொண்டிரு. பெண் ஒருத்திக்கு ஒரு அங்குல இடம் கொடுத்தால் போதும் அவள் ஒரு மைல் பிடுங்கிக் கொள் வாள். இந்த மாதிரிப் பேச்சை விட்டு விடு. வாழ்வதிலே அலுப்புக் கொண்டு சாவைத் தேடுகிற ஒருவனிடம் சொல் வதற்கு என்ன இருக்கிறது?” . இதர வேளைகளில், அவளுடைய அமைதியான கண்ணிர்ப் பெருக்கினலும், உணர்ச்சி கிறைந்த குறை கூறல்களிலுைம் அடங்கிப் போவான் அவன். உடனே வருத்தத்தோடு விஷயங்களை விளக்கிச் சொல்வதற்காக அவன் பெரும்பாடு படுவான். - "என்னைப் போன்ற ஒரு மனிதனேடு என்ன தான் செய்ய முடியும்? நான் சதா உன்னேக் காயப் படுத்து கிறேன். இதை நானே அறிவேன். ஆனல் எனக்கு இருப் பது நீ ஒருத்தி தான் என்பதையும் நான் அறிவேன். உண்மைதான்; சில சமயங்கள் கான் அதை மறந்து விடு கிறேன். சில நேரங்களில் உன் பக்கம் பார்க்கக் கூட சகிக்க வில்லை எனக்கு. மேட்ரோன, அதை நினைத்துப் பார்!