பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78 ஆர்லோவ் தம்பதிகள் போது, பயத்தின் ஒரு விதக் குளிர் அவனைப் பற்றிக் கொண்டது. அதே சமயத்தில், அந்த வீட்டு வளைவில் உள்ள அத்தனே பேர்களிலும் அவன் மாத்திரம் தான் அங்கு போய் வியாதிக்காரனப் பார்க்கும் துணிச்சல் பெற்றுள்ளான் எனும் உணர்வு எழுப்பிய ஆனந்தமும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. இரண்டாவது மாடி ஜன்ன லின் மூலம் தையல்காரர்கள் தன்னையே கவனித்துக் கொண்டிருக்கிருர்கள் என்று அறியவும் அவனுடைய இந்த சுயதிருப்தி மேலும் அதிகமாக வளர்ந்தது. அவன் வாயில்ை சீட்டி அடித்து, தன் தலையைத் தெம்புடன் அசைத்துக்கொண்டான். ஆனல் அந்த வாசலை அடைக் ததும், அவன் சிறு ஏமாற்றம் ஒன்றை சென்காவின் உருவில் சக்திக்க நேர்ந்த்து. - கொஞ்சம் கீறல் தெரியும்படி கதவைத் திறந்து வைத்து, சென்கா தனது கூரிய மூக்கை அதனூடே திணித்து நின்மூன். வழக்கம்போல், அவன் தனது ஆராய்ச்சியில் பரிபூரணமாக ஈடுபட்டிருந்ததால், கிரிகரி அவனுடைய காதைப் பிடித்துத் திருகியபோதுதான் திரும்பிப் பார்த்தான். "கிரிகரி மாமா, அது அவனே ஒரேயடியாகத் திருகிப் போட்டு விட்டது” என்று ரகசியக் குரலில் பேசினுன் அவன். அழுக்குப் படிந்த அவன் முகம் புதிய அனுபவங் கள் எழுப்பிய உணர்ச்சிகளினல் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. "காய்ந்து விட்ட காளான் மாதிரித் தோன்றுகிருன் அவன்' என்று அவன் சொன்னன். அறையினுள்ளிருந்து காற்றம் பிடித்த காற்று வந்து தாக்கியது.கிரிகளி பதில் எதுவும் சொல்லாமல்,சென்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்றான். அதே வேளையில்,