பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையைப் பின்னால் மறைத்துக் கொண்டே கண்ணன் வருகிறான். கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே கண்ணன் வருகிறான். டையப் பைய நடந்து நடந்து கண்ணன் வருகிறான். பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே கண்ணன் வருகிறான். 令 ● షో ** ఈ్మ• శ• கண்ணன் எதையோ பின்புறம் கையில் வைத்து மறைக்கிறான். என்ன வாக இருக்குமோ? எட்டிப் பார்த்தேன், ஆவலாய். எட்டி எட்டிப் பார்த்துமே எனக்குத் தெரிய வில்லையே! சுற்றி வந்தேன் கண்ணனை, சுற்றி அவனும் ஏய்த்தனன் மாயக் காரன் கைகளை மறைத்து மறைத்து வைத்ததால், ஒய்ந்து போனேன். கடைசியில் உயரே கையைத் தூக்கினான். கண்ணன் கையில் இருந்ததைக் கண்ட வுடனே நானுமே கொண்டேன் மிகவும் இன்பமே குதிக்க லானேன், மகிழ்ச்சியில்: 78