பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடி அசையும் பூக்கள்-நான் அருகில் சென்று பறிப்பேன். கூடை நிறைந்து போகும்-நான் கொய்த மலர்கள் சிரிக்கும். பார்க்கும் போதும் சிரிக்கும்-நான் பறிக்கும் போதும் சிரிக்கும். சேர்த்துக் கட்டும் போதும்-அவை சிரித்துக் கொண்டே இருக்கும்: கண்ணன் சிலைக்குப் போட-நான் கட்டி வைத்த பூக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கும்-என் சின்னத் தம்பி போல! 82