பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தன் சொல்கிறான் ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த ஒலைக் குடிசை என் குடிசை சூறைக் காற்றில் பறக்கும்.அது. சிறுமழை பெய்யினும் ஒழுகும்.அது. யாரும் உள்ளே நுழைந்திடலாம். இழுத்துச் சாத்திடக் கதவில்லை. ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த ஒலைக் குடிசை என் குடிசை. அருகில் எந்தத் தெருவுமில்லை. அந்திபட் டாலோ விளக்குமில்லை. சிறுஅகல் விளக்கில் படித்திடுவேன். தேர்வில் நிச்சயம் வென்றிடுவேன். 85