பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கண்ணன் என்றே கையெ ழுத்தைப் போட்டு நானுமே, கடிதம் அதனை உறைக்குள் வைத்துக் கருத்தாய் ஒட்டுவேன். குண்டு குண்டாய் நண்ப னுடைய விலாசம் எழுதுவேன். குறையில் லாமல் அஞ்சல் தலையை உறைமேல் ஒட்டுவேன். அஞ்சல் பெட்டி வாய்க்குள் போட்டு வீடு திரும்புவேன். . . அருமை நண்பன் பதிலைக் காண ஆவல் கொள்ளுவேன். 96