பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடந் தந்து இனிய பாடல்கள் பலவற்றைப் படைத் அண்ணாமலை அண்ணாமலை என்ன சொன்னானாம்? ஆனை முதுகில் ஏறிச்செல்ல ஆசை என்றானாம்: கத்திக் கப்பல் செய்து வைத்தேன் கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன். வா, மழையே, வா வா, மழையே, வா. எனும் பாடல்கள் சான்றாம். சொன்ன சொற்களே மீண்டும் மீண்டும் வருமாறு பாடுவது குழந்தைகளை எளிதில் கவரும் தன்மையதாம். அவ்வுத்தி இப்பாடல் களிலும் இன்னும் இவையொத்த வேறுசில பாடல் களிலும் கையாளப்பட்டுள்ளது. சின்னச் சின்னக் குழந்தையம்மா எங்கள் பாலமுருகன்-புன் சிரிப்புக் காட்டி மயக்கிடுவான் எங்கள் பாலமுருகன். எனும் முதல் பாடல் தொடங்கி நூல் முழுதும் நிறைந்துள்ள ஒலிநயப் பாடல்கள் நம்மை முருகனின் புன்சிரிப்பினும் மயக்குவதைக் காண்கிறோம்! நாட்டுப் பற்றாளர் நான் இந்தியன் என்று சொல்வதில் ஒவ்வொரு வரும் பெருமைகொள்ள வேண்டும். காஷ்மீர் முதல் X