பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை, தந்தை மகிழும் வகையில் கற்று வருகிறோம்-நல்ல அறிஞர் சொன்ன வழியில் நாளும் நிற்க முயல்கிறோம். உண்மை ஒன்றே கடவுள் என்றே உணர்ந்து வருகிறோம். உழைத்து நாமும் உயர்வோம் என்றே உறுதி கொள்கிறோம். ஏழை யென்றும் எளியோ ரென்றும். எண்ணங் கொண்டிடோம்-நாம் இந்தி யர்கள் அனைவருக்கும் சொந்த மாகிறோம். நாளை இந்த நாட்டை நாமே ஆளப் போகிறோம்-இன்றே நல்ல முறையில் அடித்த ளத்தை அமைத்துக் கொள்ளுவோம். 106