பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篡 புதுக்கோட்டைத் தனிஅரசில் அந்த நாளில் புகழுடனே விளங்கிவந்த ஊர்க ளுக்குள் நான்பிறந்த இராயவரம் என்னும் ஊரில் நல்லவர்கள் பலர்தொண்டு செய்து வந்தார். பாரதியார் பெயராலே சங்கம் வைத்துப் பையன்கள் சிலர்கூடி நடத்தி வந்தோம். அறிஞர்களை வரவழைத்துப் பேசக் கேட்டோம். அரியபல புத்தகங்கள் படித்து வந்தோம். தேசபக்திப் பாடல்களைக் கற்று வந்தோம். தினந்தோறும் நல்லறிவைப் பெற்று வந்தோம். பாரதியார் விழாநடத்த ஆசைப் பட்டோம். பலர்கூடி ஆர்வமுடன் ஈடு பட்டோம். 125