பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாம்பைக் கொன்ற வீரன்! சாலிக் கிராமம் அருகிலே சைக்கிள் ஒட்டிச் செல்கையில், நாலு மீட்டர் இருக்கலாம்; நடுவே பாம்பு கிடந்தது. அஞ்ச வில்லை நானுமே; அலற வில்லை நானுமே; கொஞ்ச மேனும் தயக்கமும் கொள்ள வில்லை நானுமே. நிலவின் ஒளியில் வேகமாய் நேராய் எனது சைக்கிளைத் தலையைப் பார்த்து ஏற்றினேன்; "சட்னி என்றே எண்ணினேன். சிறிது தூரம் சென்றதும், r திரும்பிப் பார்த்தேன் நானுமே. சிறுவர் இருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே வந்தனர். 'உண்மைப் பாம்பு என்றுநீ ஒலைப் பாம்பை எண்ணினாய். நன்கு வீரம் காட்டினாய், நண்பா' என்றே நகைத்தனர். 433