பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முட்டு கின்ற மூச்சுடன் குட்டி மான்போல் ஓடினேன். எட்டி டாத தொலைவிலே ஏய்த்துப் பறந்து சென்றதே! பட்ட ணத்தை நோக்கிஎன் பட்டம் பறந்து செல்லுமே. எட்டு மாடி உள்ளதோர் கட்ட டத்தில் இறங்குமே! பட்ட ணத்தில் உள்ளவர் பலரும் இதனைக் காணுவர்; வட்ட மாகக் கூடுவர்; மகிழ்ச்சி யோடு நெருங்குவர். பட்டம் நடுவே பெரியதாய்க் கொட்டை எழுத்தில் என்பெயர் "கிட்டு என்றே தெரிந்திடும். கீர்த்தி அதனால் பெருகிடும்!