பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறகை அடித்துக் கொண்டன; சீறித் தாவிக் கொத்தின; குரலைக் காட்டி வேகமாய்க் கோபத் தோடு கூவின. அம்மாக் கோழி குரலுமே அந்தச் சமயம் கேட்கவே, வம்புச் சண்டை நிறுத்தின. மனத்தைக் கட்டுப் படுத்தின. சண்டை ஓய்ந்து போனதும் தரையைக் கூர்ந்து நோக்கின. கண்ணில் அந்த புழுவையே காண வில்லை; இல்லையே! சண்டை முடியும் வரையிலும் சாவ தற்கு நிற்குமோ? மண்டு அல்ல அப்புழு. மகிழ்ந்து தப்பி விட்டதே! 452