பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருளைக் கிழங்கு மூட்டை அதனை ஒருவ னாகத் துக்கப், பெரிதும் கறுப்பன் முயன்ற போது பெரியார் ஒருவர் வந்தார். "இருவர் நாமும் சேர்ந்தால் இதனை எளிதில் துக்க முடியும். சிரமம் இன்றி இருந்த இடத்தில் திரும்ப வைத்து விடலாம்.” பெரியார் இதனைக் கூறிவிட்டுப் பெரிய மூட்டை அதனைக் கறுப்ப னோடு சேர்ந்து தூக்கிக் கட்டை வண்டி சேர்த்தார். "இந்த ஏழை சிரமம் தீர்க்க இனிய உதவி செய்தீர். எந்த வகையில் நன்றி சொல்வேன்?" என்று கறுப்பன் கூற, "வாயால் நன்றி கூற வேண்டாம். மகிழ்ச்சி யோடு பிறர்க்கு நீயும் உதவி செய்தால் எனது நெஞ்சு குளிரும்” என்றார்.