பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டம் போட்ட கழுகுகளும் வருமே மெதுவாய்க் கீழிறங்கி. தட்டுடன் அமர்ந்த குருக்களிடம் தாவித் தாவிச் சென்றிடுமே. நெய்யும் சர்க்கரைப் பொங்கலுமே நீட்டிடு வாரே குருக்களுமே. கையால் அவரும் ஊட்டிடவே கழுகுகள் உண்டு களித்திடுமே. உச்சி வேளையில் தினந்தோறும் ஒழுங்காய் கழுகுகள் வருவதையும் அச்சம் இன்றி உணவருந்தி அவைகள் பறந்து செல்வதையும் பற்பல ஆண்டாய் இம்மலையில் பார்த்தே வருவார் மக்களுமே. அற்புதக் காட்சி இதைநானும் அடடா, கண்டேன், கண்டேனே! 156