பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியப்பாவின் பாடல் அப்படியிருக்கிறது, இப்படியிருக்கிறது என்று நான் சொல்ல முயல்வது பிள்ளையே பெறாதவள், பல பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பது போலாகும் குழந்தைக் கவிதைத் துறையில் ஒப்பாரும் மிக்காருமின்றி ஓங்கி வளர்ந்துள்ள இமயம் அவர் அதன் அடிவாரத்தில் நின்று எவ்வளவு நிமிர்ந்தாலும் உச்சியை எவ்வாறு காணமுடியாதோ, அது போன்ற நிலையதே என்னு டைய இவ்வுரை! நெஞ்சில் குறிஞ்சித் தேனைப் பாய்ச்சும் நம் குழந்தைக் கவிஞர் வாழ்க! அவர்தம் கவிதைத் தொண்டு வளர்க! அன்பன் சு. செல்லப்பன் 20.5, 1986