பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது சுதந்திரம்? ஒன்பது மணிவரை படுக்கையில் கிடந்தே உறங்கிடும் பொன்னனை எழுப்பினள் அம்மா. "இன்றுநம் தேசச் சுதந்திரத் திருநாள். எழுந்திரு சீக்கிரம்' என்றனள் அம்மா. “சுதந்திர நாளில் சுகமாய்த் தூங்கச் சுதந்திரம் உண்டு. சும்மா போபோ. மதியம் வரைநான் தூங்கிடு வேன்"என மறுபுறம் திரும்பிப் பொன்னன் படுத்தான். 163