பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்டை விலையைப் போலவே மூன்று மடங்கு இருந்திடும் மாட்டைப் பெற்றுக் கொள்ளவே மனம் இசைந்தான் திருடனே. கந்தன் மாட்டை அவிழ்த்தனன், கள்ளன் கையில் கொடுத்தனன். அந்த மாடோ புதியவர் அருகில் வந்தால் பாயுமே! ஆர்வ மாகத் திருடனும் அதனைத் தட்டிக் கொடுக்கவே, கூர்மை யான கொம்பினால் குத்தித் தொடையைக் கிழித்தது: தொடையி லிருந்து ரத்தமும் கொடகொ டென்று கொட்டவே உடனே பயந்து திருடனும் ஒட்ட்,மாக ஓடினான். 'ஐயோ! அப்பா!' என்றவன் அலறிக் கொண்டே வேகமாய்க் கையைக் காலை உதறியே காட்டுக் குள்ளே ஓடினான். கந்தன் மாடு துரத்தவே, கதறித் திருடன் ஓடவே, கந்தன் அந்தக் காட்சியைக் கண்டு கண்டு சிரித்தனன் 468