பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை விரும்பி அணிபவராம்-நேரு இந்திய நாட்டின் சுடர்மணியாம்! சண்டை விரும்பாத உத்தமராம்-அவர் சாந்த வழியில் சென்றவராம். சாந்த வழியிலே சென்றவராம்-அந்தத் தங்கத் தலைவரின் சொற்படிநாம் சாந்த வழியிலே சென்றிடுவோம்-என்றும் சாந்த வழியிலே சென்றிடுவோம். பூக்களின் குரல்: சாந்த வழியிலே சென்றிடுவோம்-நாம் சாந்த வழியிலே சென்றிடுவோம். கமலாவும் விமலாவும்: -நாமும் சாந்த வழியிலே சென்றிடுவோம் சாந்த வழியிலே சென்றிடுவோம். (பூக்களைத் தொடர்ந்து கமலாவும் விமலாவும் திரைக்குள்ளே போகிறார்கள்.)