பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடுவது ஏன்? எலியே, எலியே, ஓடுவதேன்? என்னைப் பூனை துரத்துவதால். பூனையே, பூனையே, ஓடுவதேன்? பொல்லா வெறிநாய் துரத்துவதால். நாயே, நாயே ஓடுவதேன்? நாலடிச் சிறுவன் துரத்துவதால். சிறுவா, சிறுவா, ஒடுவதேன்? சிறுத்தை பின்னால் துரத்துவதால். சிறுத்தையே, சிறுத்தையே, ஓடுவதேன்? சிங்கம் என்னைத் துரத்துவதால். சிங்கமே, சிங்கமே, ஓடுவதேன்? எங்கோ வேட்டுக் கேட்பதனால்: