பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தத் துணியில் சமமாய் ஐந்து பங்கு போட்டன. அவற்றில் நான்கை நான்கு, காலில் நன்கு சுற்றின. மீதம் உள்ள துண்டுத் துணியால் கழுத்தை மூடின. விரைந்து கூடி எட்டுக் குரங்கும் வேலை செய்தன. ஒரம் முழுதும் முட்க ளாலே பொருத்தி விட்டன. உடனே எட்டுக் குரங்கும் எதிரே வந்து நின்றன. "ஓஹோ ஒஹோ' என்றே அவைகள் குதிக்க லாயின. உடுப்புப் போட்ட சிவிங்கி யாரைப் பார்த்து மகிழ்ந்தன! பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி யாலே துள்ளிக் குதித்தன! பாய்ந்து சென்று சிவிங்கி முதுகில் ஏறிக் கொண்டன. எட்டுக் குரங்கை முதுகில் ஏற்றிக் கொண்ட சிவிங்கியும் இன்ப மாகக் காடு முழுதும் சுற்றி வந்தது. 195