பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணன் சுப்ர மணியர் கோயிலைச் சுற்றி வருவார்; அழைத்துவா. தம்பி சுப்ர மணியர் கோயிலைச் சுற்றிப் பார்த்தும் இல்லையேல்...? அண்ணன் கப்பல் காரன் தெருவிலே கடையில் இருப்பார்; அழைத்துவா. தம்பி கப்பல் காரன் தெருவிலே கடையில் பார்த்தும் இல்லையேல்...? அண்ணன் சும்மா திரும்பி வந்திடு துரித மாகச் சென்றி.டு. தம்பி சும்மா திரும்பி வரவாநான் இம்மாந் தூரம் அலைவது? அம்மா டியோ? இங்குநான் நிம்மதி யாய்த் தூங்குவேன். குப்புசாமி - அப்புசாமி பற்றிய மற்றப் பாடல்களை வேறு ஒரு நூலில் காணலாம்.