பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைக் கவிஞரின் படைப்பும் பணியும் பிறப்பு 7.11.1922, இராயவரம், புதுக்கோட்டை மாவட்டம். பெற்றோர்: அழகப்பச் செட்டியார், உமையாள் ஆச்சி. கவிதை எழுதத் தொடங்கியது. 13-வது வயதில். சக்தி'யில் பணி: 1940-ல் வை. கோவிந்தன் அவர்களின் சக்தி அலுவலகத்தில் பொருளாளராகச் சேர்ந்தார். சக்தி இதழின் ஆசிரியர் தி.ஜ.ர. அவர்களின் ஆதரவால் சக்தியில் எழுதத் தொடங்கினார். - இந்தியன் பாங்கில் பணி: 1941-ல் இந்தியன் பாங்கில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, பல கிளைகளில் மேலாளராக இருந்தபின், காரைக்குடியில் வட்டார மேலாளராகப் (Area 'Manager) பணியாற்றி 1982 நவம்பரில் ஒய்வு பெற்றார். புத்தகங்கள்: இதுவரை குழந்தைகளுக்காக ஏறத்தாழ 60 புத்த்கங்களை எழுதியுள்ளார். மத்திய அரசின் பரிசு பெற்றவை: 1. மலரும் உள்ளம் (முதல் தொகுதி) , கவிதைகள் 2. பாட்டிலே காந்தி கதை தமிழக அரசின் பரிசு பெற்றவை: 1. மலரும் உள்ளம் (முதல் தொகுதி) , கவிதைகள் 2. பாப்பாவுக்கு பாட்டு 3. நல்ல நண்பர்கள் (கதை) 4. பெரியோர் வாழ்விலே 5. சின்னஞ் சிறு வயதில் வாழ்க்கை நிகழ்ச்சிகள் 6. பிள்ளைப் பருவத்திலே குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர். 1950-ல் குழந்தைகளுக்காக எழுதுவோரை ஒன்று சேர்த்து, குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர். பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியவர். பிறகு இதன் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். 206